மதுரை : கரூர் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள வீடுகளை அகற்ற வனத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் மனுதாரரின் விளக்கத்தை பரிசீலனை செய்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள வீடுகளை விட்டு வெளியேற வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
