மாநகரம் படம் தொடங்கி விக்ரம் படம்வரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி பெற்றவை. குறிப்பாக கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தௌ மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் என கூறப்படும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வில்லன் எனவும் தகவல் வெளியானது. மேலும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்டோரும் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே படத்தின் கதை, திரைக்கதை எழுதுவதற்காக சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறினார் லோகேஷ். மேலும், விக்ரம் படத்திற்கு ப்ரோமோ ஷூட் செய்யப்பட்டதுபோல் இந்தப் படத்திற்கும் ப்ரோமோவுடன் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.
தளபதி 67 படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடந்தது. மேலும் விக்ரம் படத்துக்கு எப்படி ப்ரோமோ வெளியிடப்பட்டதோ அதேபோல் இந்தப் படத்துக்கும் உருவாகவிருக்கிறது.
இந்தச் சூழலில் தளபதி 67 படத்தில் தான் நடிப்பதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் உறுதிப்படுத்தினார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அதேசமயம் படத்தில் பல வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரும் ஒரு வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது விஜய் படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி ரூபாயை அர்ஜுன் சம்பளமாக கேட்டதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. இதுவரை 1 கோடி ரூபாயிலிருந்து தாண்டாத அர்ஜுன் எதற்காக இந்தப் படத்திற்கு மட்டும் 4 கோடி ரூபாய் கேட்கிறார் என புரியாமல் தயாரிப்பு தரப்பு ஆடிப்போய்விட்டதாம். அதேசமயம், அர்ஜுன் நடித்தால் கச்சிதமாக இருக்குமென்பதால் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார்களாம் தயாரிப்பு தரப்பினர்.