டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]
