இலவச வேட்டி சேலை; வேற லெவல் அறிவிப்பு.. மக்கள் ஹேப்பி!

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்தார்.

இதே போல் நடப்பாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால் இலவச வேட்டி சேலை குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளதால் பொதுமக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடக்கும் என, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து பரபரப்பை எகிற விட்டுள்ளார்.

இந்நிலையில் இலவச- வேட்டி சேலை குறித்து, வெளியாகி உள்ள வேற லெவல் தகவல் பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் என, எடப்பாடி பழனிச்சாமி அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-11-2022 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான நான் உள்பட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளி வந்தது.

இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால், போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

1 கோடியே 79 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி- சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும் மற்றும் ஏற்கனவே அதற்காக ரூ.487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த திட்டத்திற்குத் தேவையான வேட்டி- சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு, திட்டத்தை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகின்றது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.