“தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி!" – கே.எஸ்.அழகிரி தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சியாக ‘அரசியல் அமைப்பை பாதுகாப்போம் – கையோடு கைகோர்ப்போம்’ என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்லப் பிரசாத் முன்னிலையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பாரத் ஜோடோ யாத்திரை

அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 100 காங்கிரஸ் கொடிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தக்கட்டமாக வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் விதமாக, ‘அரசியல் அமைப்பை பாதுகாப்போம் – கையோடு கைகோர்ப்போம்’ என்ற பரப்புரையை ஜனவரியில் தொடங்க இருக்கிறோம். இது தொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் விவாதிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த பரப்புரையை மாநில அளவில் ஜனவரி 15-ம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் ஜனவரி 16 முதல் 30-ம் தேதிக்குள் முடிக்கவும், ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கும் தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிப்பது உள்ளிட்ட திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ராகுல் காந்தி – பிரியாங்கா காந்தி

‘அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கைகோர்ப்போம்’ என்ற பரப்புரையில் இந்திய பாரத் ஜோடோ யாத்திரை நடைப்பயணம் குறித்த ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒட்டுவது, அந்த நடைப்பயணத்தின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படவுள்ளது. அதில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிட இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.