பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என்பது குறித்த மணற்சிற்பத்தை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்’ என்பது குறித்த மணற்சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை அமைப்பான, தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையம் சார்பில் இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனை பார்வையிட்ட முதலமைச்சர், பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார். அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பதாகையில் கையெழுத்திட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.