பொங்கல் பரிசாக ரூ.5000? -திமுக அமைச்சர் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பொங்கல் தொகுப்பில் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு.?

அமைச்சர் ராஜகண்ணப்பன்: போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் திமுக அரசு இன்றைக்கு இருக்கின்ற நிதி ஆதாரத்தை வைத்து முதல்வர் பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுக்கிறார். கரும்பு கொடுப்பது என்பது போராட்டத்திற்காக அல்ல; மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதல்வர் கொடுக்கிறார்; எடப்பாடி பேசுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

இலவச வேட்டி சேலைகள் இன்னும் பல இடங்களுக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?

அமைச்சர்: கூடிய சீக்கிரத்தில் கொடுத்துவிடுவோம் என்று அந்த துறையின் அமைச்சர் கூறி இருக்கிறார் அதன்படி நடைபெறும்.

பொங்கல் தொகுப்பு குப்பை வண்டிகளில் ஏற்றிச் சென்றது குறித்த கேள்விக்கு.?

அமைச்சர் ராஜகண்ணப்பன்: ஏதோ ஒரு சில இடங்களில் நடந்திருக்கும் அது பிரச்சனை இல்லை 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் அவர்களுக்கு வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது. எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் அத்துறை அமைச்சர் கூறியது போன்று நடைபெறும். ஆயிரம் ரூபாய் பரிசு., சர்க்கரை., கரும்புக்கு முறையான விலையை நிர்ணயித்து முறைப்படி பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் வழங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.