20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல் படை தலைமை கமாண்டன்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி ஏ.கயல்விழி சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக ஆர்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.