டெல்ல : மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை அமலுக்கு வருகிறது. ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதை தொடந்து அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு இனி 8% வட்டியும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 7% வட்டியும் கிடைக்கும். இதேபோல் அஞ்சலகங்களில் ஓராண்டு முதல் 5 ஆண்டு வரையிலான முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் 1.1% வரை அதிகரித்துள்ளது. மாதாந்திர வருமானத்திட்டத்திற்கு இனி 7.1% வட்டியும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7% வட்டியும் கிடைக்கும். தொழிலாளர் வைப்பு நிதியான PPF மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.