இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்திய ஒற்றுமை நடைபயணம் பற்றி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை சாதாரணமாகத்தான் தொடங்கினேன். மேலும், ஒற்றுமை பயணம் பல்வேறு மக்கள் உணர்வுகளை, குரல்களை பிரதிபலிக்கிறது என மெதுவாக புரிந்து கொண்டேன்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். எங்களை விமர்சித்தது ஒற்றுமை பயணம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும், வெறுமனே பாஜகவை எதிர்க்காமல் நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டால் பாஜக வெற்றி பெறுவது கடினம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.