திருநெல்வேலி : மனைவி இறந்த சோகத்தில் கணவன் தீக்குளித்து தற்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் வைகுண்ட மணி. இவர் மகன் தனசிங்கிற்கும், அடையக்கருங்குளத்தை சேர்ந்த மஞ்சுபாரதி என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மஞ்சு பாரதி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். அதிலிருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தனசிங் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதனால், வீட்டிலிருந்து புகை வருவதைப்பார்த்த அவருடைய தம்பி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தனசிங்கை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் தனசிங் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.