மின்வெட்டு நேரத்தில் மாற்றம்:வெளியான புதிய அறிவிப்பு


மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இன்று(31) மற்றும் நாளை (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீண்டும்  ஜனவரி 2 ஆம் திகதி மின்வெட்டு

மேலும் ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்:வெளியான புதிய அறிவிப்பு | Change In Power Cut Time New Announcement

இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.