கேரளா: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சுற்றுலாவுக்காக இடுக்கி மாவட்டத்திற்கு காரில் வந்துள்ளனர். அப்போது கார், இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட குட்டிக்கானம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், காரை சாலையோரமாக நிறுத்தியதை அடுத்து காரில் இருந்தவர் அவசர அவசரமாக கீழே இறக்கினர். அடுத்த சில நொடிகளில் காரின் முன் பகுதியில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
image
இந்நிலையில், அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் என்ஜின் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் எரிந்து சாம்பலாகின. புகை வந்த உடன் வாகனத்தில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பீருமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.