சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் திடீர் மரணம்

ஹைதராபாத்: தமிழகத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஷேக் (22). வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹர் மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அண்மையில் இந்தியாவுக்கு வந்த அவர் டிசம்பரில் 11-ல் தான் மீண்டும் சீனாவுக்கு திரும்பிச் சென்றார்.

சீனா சென்றடைந்தவுடன் எட்டு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்று அப்துல் ஷேக் குடும்பத்தினர் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில், தமிழக அரசின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.