பணமதிப்பிழப்பு செல்லும்… உச்ச நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பின் விவரம்!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி
பணமதிப்பிழப்பு
நடவடிக்கையை எடுத்தது. அதாவது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் அவற்றை வங்கியில் கொடுத்து வேறு நோட்டுகளாக பெறவும்,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

அன்றாட செலவிற்காக ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கவும் ஏடிஎம்கள், வங்கிகளில் மக்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பலர் உயிரிழந்ததை பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்த நாட்டையே புரட்டு போடும் அளவிற்கு பணமதிப்பிழப்பு மாறியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இதில் கவாய், நாகரத்னா, போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மத்திய அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பணமதிப்பிழப்பிற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதன்படி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது.ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பின்னரே மத்திய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்தது.மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு எதுவும் இல்லை.ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக் கொள்ள 52 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது போதாது என்று கூற முடியாது.பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி ரத்து செய்ய முடியாது.இந்த வழக்கில் மேலும் பல கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு அனுப்ப நீதிபதி கவாய் பரிந்துரை செய்தார்.

நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் இருக்கிறது என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்தார். அதாவது, பணமதிப்பிழப்பு செல்லும் என்பதில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகள் படி மத்திய அரசு முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியத்தை காக்க தேவைப்பட்டால் அவசர சட்டம் கூட நிறைவேற்றி இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.