இஸ்லாமிய பெண் வரைந்த 101 கிருஷ்ணர் ஓவியங்கள்… குருவாயூர் கோவிலுக்கு அன்பளிப்பு!

கேரளா மாநிலம், கோழிக்கோடு தாமரச்சேரி தாலுகாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஜஸ்னா. இவருக்கு ஓவியம் வரைவதில் விருப்பமுண்டு. ஒருநாள் இவரின் கணவர் சலீம், கிருஷ்ணரின் படத்தைக் கொண்டுவந்து காட்ட, கிருஷ்ணரின் மீது அதீத விருப்பம் கொண்டுள்ளார். தன்னுடைய விருப்பத்தைக் கலைத் திறன் மூலம் வெளிப்படுத்த விரும்பியவர், ஒரு செய்தித்தாளில் பார்த்த கிருஷ்ணரின் புகைப்படத்தை முதலில் வரைந்துள்ளார்.

கிருஷ்ணன் ஓவியங்களுடன் ஜஸ்னா

ஜஸ்னாவின் செயலுக்கு குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. எனினும், `கலைக்கு ஏது கடவுள்’ என தொடர்ந்து கிருஷ்ணரின் ஓவியங்களை வரைந்திருக்கிறார். நான்கு மாத காலத்தில் வெவ்வேறு முகபாவனைகளுடன் கூடிய 101 கிருஷ்ணர் ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறார்.  

அத்துடன் நிற்காமல், தான் வரைந்த கிருஷ்ணர் ஓவியங்களை, குருவாயூர் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்க முடிவு செய்து, கோவிலின் தலைமை அர்ச்சகர் சேன்னாஸ் தினேசன் நம்பூதிரிபாட்டிடம் கொடுத்துள்ளார். ஃப்ரேம் செய்யப்பட்ட சிறிய, பெரிய ஓவியங்கள் அனைத்தும் கோவிலின் கிழக்குப் பகுதியில் வரிசையாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டன. 

கிருஷ்ணரின் ஓவியங்கள்

இஸ்லாமிய பெண் வரைந்த, குருவாயூர் கோவிலில் உள்ள கிருஷ்ணரின் ஓவியத்தைக் காண, பலரும் அங்கு திரண்டு வருகின்றனர். மதத்திற்கு அப்பாற்பட்டு கிருஷ்ணரின் ஓவியத்தை வரைந்த முஸ்லிம் பெண்ணுக்குப் பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.