தமிழகத்தில் பெரிய அளவில் கால் பதிக்க வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருக்கிறது. இதற்காக அதிமுகவை படிப்படியாக பலவீனப்படுத்தி வருவதும் அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திமுகவிற்கு எதிராக நாங்கள் மட்டுமே என்ற நிலையை நோக்கி பாஜக நடைபோட்டு கொண்டிருக்கிறது.
தீயாய் பரவும் செய்தி
இதற்காக தான் அண்ணாமலையை தொடர்ச்சியாக பேச வைத்து ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வரும் 2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவுள்ளார் என்ற செய்தி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தெற்கில் கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வசம் தான் அதிக அளவில் மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.
ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி… 2024 தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி?
தென்னிந்தியாவில் பாஜக வியூகம்
எனவே இதை மாற்றி காட்ட வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதற்கான முயற்சியாக கூட ராமநாதபுரம் தொகுதியை அக்கட்சி தேர்வு செய்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் மோடிக்கான சாதக, பாதகங்களை பற்றி ஆராய வேண்டியுள்ளது.
சாதகமான அம்சங்கள்
காத்திருக்கும் சிக்கல்
இருப்பினும் வெற்றி பெறுவது என்பது நிச்சயம் கேள்விக்குறி தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதற்கு ராமநாதபுரத்தில் அதிக அளவில் இருக்கும் இஸ்லாமிய வாக்கு வங்கி. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மீனவர்கள் பிரச்சினை. இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாத மத்திய அரசு. அதுமட்டுமின்றி பாஜக மற்றும் மோடி எதிர்ப்பு மனநிலை.
வேலைவாய்ப்பு, மொழி சார்ந்த விஷயங்களில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மத்திய பாஜக அரசு செய்த விஷயங்கள் ஆகியவை எதிர்வினை ஆற்ற தயாராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.