சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் ஒப்பந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். பூங்கா துணை இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை, விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
