பொங்கல் பரிசு பெற கடைசி வாய்ப்பு; எப்போதுன்னு தெரியுமா?

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்தார்.

இதே போல் நடப்பாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் வருகின்ற 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் நியாய விலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்படும்.

இதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த முறைபோல் இந்த முறை எந்த குளறுபடியும் நடக்கக் கூடாது என தமிழக அரசு மிக தீவிரமாக உள்ளது.

இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் டோக்கன் நேரடியாக சென்றும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டை காண்பித்து நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை தமிழக அரசால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 15ம் நாள் பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 16ம் நாள் பெற்றுக்கொள்ளலாம் என, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.