குளிர் அலை வீசி வருவதால் 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: குளிர் அலை வீசி வருவதால், பஞ்சாப் ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான மூடு பணியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது , வடமாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் புத்தாண்டுக்கு பிறகு கடுமையான மூடு பனி மற்றும் குளிர் நீடித்து வருகிறது, இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுருக்கிறது. விமான சேவை மற்றும் ரயில் சேவை, சாலை போக்குவரத்திலும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியை பொறுத்தவரை இதற்குமுன்பு குளிர் காரணமாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்தது, தற்போது இந்த மூடு பனி தீவிரமாக இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருக்கிறது. பருவமழை காரணமாக ஜனவரி 10ம் தேதி முதல் இரவு முதல் அடர்த்தியான மூடு பனி மற்றும் குளிர் அலைகள் அனைத்தும் குறையும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.  

பஞ்சாப் ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச சிவப்பு எச்சரிக்கையும் ராஜஸ்தான் மற்றும் பீகாரில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த குளிர் அலை காரணமாக உத்தரபிரதேச கான்பூரில் 25க்கும் மேற்பட்ட உயிர் பலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறிருக்கிறது. தொடர்ந்து குளிர் அலை ஏற்படும் காரணமாக டெல்லியில் இன்று இரவு 1.8% பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்ச பதிவாக பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.