நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட சக பயணிக்கு இந்திய மருத்துவர் ஒருவர் 5 மணி நேரம் விடாமல் போராடி உயிரை காப்பாற்றியுள்ளார்.
நடுவானில் சக பயணிக்கு மாரடைப்பு
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து இந்தியாவின் பெங்களூர் நகரை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று பறந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தில் இருந்த 43 வயதுடைய பயணி ஒருவருக்கு நடுவானில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நல்லவேளையாக அந்த விமானத்தில் பிரித்தானிய வாழ் இந்திய மருத்துவரான விஷ்வராஜ் வெமலா(48) தனது தாயாருடன் பயணித்த நிலையில், அவர் உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த பயணியின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
5 மணி நேர போராட்டம்
இந்த திடீர் அவசர சிகிச்சை பற்றி பேசிய டாக்டர் விஷ்வராஜ், எனது மருத்துவ பயிற்சியின் போது இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு இருக்கிறேன், ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது இப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவருக்கு சுவாசம் கொண்டு வர வைத்தேன், ஆனால் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற நீண்ட நேரம் போராட வேண்டி இருந்தது.
Dr Vishwaraj Vemala, one of our consultant hepatologists, saved the life of a passenger who suffered two cardiac arrests mid-flight. With limited supplies, Dr Vemala was able to resuscitate him before handing over to emergency crews on the ground.
📰: https://t.co/VFOAa1VQyU pic.twitter.com/EXEg9Udujj— University Hospitals Birmingham (@uhbtrust) January 3, 2023
இறுதியாக 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை நாங்கள் காப்பாற்றினோம் என மருத்துவர் விஷ்வராஜ் வெமலா தெரிவித்துள்ளார்.