5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதேப் போல், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குளிர்ந்த காற்று மற்றும் மோசமான மூடு பனியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வட மாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் குறையும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வட மாநிலங்களில் புதிய ஆண்டானது பிறந்ததற்கு பிறகு கடுமையான மூடு பனி மற்றும் குளிர் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை மற்றும் ரயில் சேவை, சாலை போக்குவரத்திலும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியை பொறுத்தவரை இதற்கு முன்பு குளிர் காரணமாக ஆரஞ்சு மட்டுமல்லாமல் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

தற்போது இந்த மூடு பனி தீவிரமாக உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பருவ மழையின் காரணமாக ஜனவரி 10ம் தேதி முதல் இரவு முதல் அடர்த்தியான மூடு பனி மற்றும் குளிர் அலைகள் அனைத்தும் குறையும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்து உள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மற்றும் ராஜஸ்தான் மற்றும் பீகாரில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த குளிர் காற்று காரணமாக உத்தரப் பிரதேசம் கான்பூரில் 25க்கும் மேற்பட்ட உயிர்பலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும், தொடர்ந்து குளிர் காற்றானது டெல்லியில் இன்று இரவு 1.8% பதிவாகி உள்ளது. அதே சமயம் கடந்த 10 ஆண்டில் குறைந்த பட்ச பதிவாகவே இந்த பதிவு பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.