நெல்லை: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்; 4 பேரைக் கைதுசெய்த போலீஸ் – என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் முழுவதும் நகக்கீறல்கள் உள்ளிட்ட காயங்களுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணிடம் மருத்துவர்கள் என்ன நடந்தது என்று கேட்டதற்கு பதில் அளிக்காமல் பயந்தவாறு அமைதியாக இருந்திருக்கிறார். அதையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அழுது கதறிய அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் புகாராகத் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரில், “என் கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். நெல்லையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த எனக்கு நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு உதவிகளைச் செய்ததை நம்பினேன்.

கைது

ஆட்டோ டிரைவர் முருகன் என்னை மாநகரப் பகுதியிலுள்ள ஒரு செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கெனவே முருகனின் நண்பர்களான மணிகண்டன், பேராட்சி, அய்யாசாமி ஆகியோர் இருந்தனர். அங்கு சென்றதும் நால்வரும் சேர்ந்து என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற என்னை அடித்து உதைத்ததுடன் கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். பின்னர் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி அனுப்பினார்கள்” என்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். அதில், அந்தப் பெண்ணை டிரைவர் முருகன் உள்ளிட்ட நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததால், அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.