அமெரிக்கா,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டொலர் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 100 மில்லியன் டொலர் நிவாரண உதவி வழங்குகிறது.

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புக்கு 1 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர்.

இதேவேளை இந்த வெள்ள பாதிப்புக்களால் பாதைகளும்இ பாலங்களும் துண்டிக்கப்பட்டும்இ நீரில் அடித்தும் செல்லப்பட்டன.

இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதற்கமையஇ பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர்இ முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரணத்திற்கு மனிதநேய அடிப்படையில் நிதி உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்நிலையில்இ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டொலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.