கோவாக்சின் மருந்து குறித்த விபரங்களை வெளியிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் குறித்த விபரங்களை வெளியிடக் கோரிய வழக்கில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியுடன் தொடர்புள்ள கோவாக்சின் மருந்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினங்கள் குறித்து மத்திய தகவல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் வர்த்தக ரகசியங்கள் இருப்பதால் பதில் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கோவாக்சின் மருந்து குறித்த விபரங்களை வெளியிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவாக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.