டெல்லி: நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ரூ.20,000 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து விநியோகத்தை ஈடுகட்ட முடிவு செய்தது. இதனால், இந்தியாவில் அதன் உற்பத்தியாளர்களிடம் அதன் முதலீடுகளை அதிகரித்து ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டது.
அதன்படி பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.8,000 கோடி மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. மற்றோரு ஐபோன் தயாரிப்பாளரான பெகட்ரான் ரூ.4,000 கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.