கடலூர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் கடலூர் மாவட்டம் அறம்பாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வரை பெட்ரோலியம் பைப் லைன்கள் பூமிக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை எப்படி எதிர்கொள்வது என தீ அணைப்பு துறையினர் தத்துருவமாக செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்