சீரம் நிறுவனம் சார்பில் 2 கோடி கோவிஷீல்ட் டோஸ் இலவசம்: முதற்கட்டமாக 80 லட்சம் அனுப்பிவைப்பு

புதுடெல்லி: சீரம் நிறுவனம் ஒன்றிய அரசுக்கு இலவசமாக 2கோடி கோவிஷீல்ட் டோஸ் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக நேற்று 80லட்சம் டோஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் சார்பில் ரூ.410கோடி மதிப்புள்ள 2 கோடி கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்தை அரசுக்கு இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று 80லட்சம் டோஸ் கோவிஷீல்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.