கடும் குளிர், அடர் பனி காரணமாக சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிகையைத் தொடர்ந்து. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும்,  வெளியில் செல்லும் போது கட்டாயம் முகத்தை மறைத்துச் செல்லவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சில நகரங்களுக்கு பனி தொடர்பாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.