ஜல்லிக்கட்டில் ஹாட்ரிக் வெற்றி; முதல்வர் ஸ்டாலின் கார் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து, நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும்.

இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவும் இணைந்து இந்த போட்டிகளை நடத்தினர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 11 சுற்றுகளாக நடந்த இந்த போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு அடைந்ததது. இந்தப் போட்டியில் சுற்றுக்கு காளைகளை அடக்க தலா 25 வீரர்கள் வீதம் 250 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடந்த இந்தப்போட்டியில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இந்த போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். மேலும் அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.

இதற்கிடையே, காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்த போட்டியில் 28 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார் விஜய். இதையடுத்து விஜய்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 17 காளையை அடக்கி 2வது இடத்தை பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு 3வது பரிசு பசுமாடு வழங்கப்பட்டது. விஜய் 3வது முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன் 2020, 2021ம் ஆண்டுகளிலும், முதல் பரிசு பெற்று உள்ளார். காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு, இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.