ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், படியில் தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.