சினிமா படப்பிடிப்பு தளத்தில் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சினிமா படப்பிடிப்பிற்காக 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கால் தடுமாறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஐயர்கண்டிகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான ஃபிலிம் சிட்டியில் சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் வெப்பன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த தொழிலாளி குமார் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 40 அடி உயரத்தில் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.