விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் – 4 மாதம் விமானத்தில் செல்ல தடை!!

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்ற நபர் 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்தார்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த “வெல்ஸ் பார்கோ” என்ற பன்னாட்டு நிறுவனம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுகு தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் ஏர் இந்தியா கடும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.