#BREAKING காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் கண்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று முடிவு எட்டப்படாததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்றது.

கடந்த முறை ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் போட்டியிட்டதால், இம்முறை அவரது மற்றொரு மகன் களம் காண்பார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.