சேலத்தில் சோகம்.. கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை..!

சேலம் அழகாபுரம் பகுதியில் கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ராஜேந்திரன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் தனது பூர்வீக வீட்டை அடமானம் வைத்து ரூ.19 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இந்நிலையில், அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.40 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பூர்விக வீட்டை தனது பெயருக்கும் எழுதித்தர வேண்டும் என்றும் நடேசன் கூறியுள்ளார். இதனால் தம்பதியினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். மேலும், வீட்டை வேறு ஒருவருக்கு விற்று பணத்தை தர ராஜேந்திரன் முயற்சித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடேசன் மீண்டும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ராஜேந்திரன் – சாந்தி தம்பதியினர் நேற்று இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை இருவரும் சடலமாக கிடப்பதை கண்ட அவர்களது மகன்கள், அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்களுடைய தற்கொலைக்கு நடேசன் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.