தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்..!

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி – என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய புவியியல் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்த்தால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து அவசரமாக வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.