பி.டி.உஷாவுக்கு 13.. இளையராஜாவுக்கு பூஜ்ஜியம்.. என்ன தெரியுமா..?

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது என, வருகைப்பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தமிழ்நாட்டிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நியமன எம்பி-க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்ட போது முதல் நாளான மாநிலங்களவையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பி-க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.