தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணை தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அய்யாலுசாமி, தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்கப்பட வேண்டும். கந்துவட்ட சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.
அதற்காக அய்யாசாமி, கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் தனது காலில் கயிறுக்கட்டி தலைகீழாக தொங்கி சுமார் ஒரு மணி நேரம் ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியுள்ளார்.