4 வயது குழந்தை பாட்டியால் கழுத்து நெறித்து கொலை

சேலம் செவ்வாப்பேட்டை அருகே 4 வயது சிறுமியை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது பாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

சூரமங்கலத்தில் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விமல்குமார், மனைவி மேகலா மற்றும்  4 வயது மகளுடன் வசித்து வருகின்றனர். மேகலா ஆண்குழந்தை பெற்று இருப்பதால் செவ்வாப்பேட்டையில் உள்ள அவரது தாயார் சாந்தி வீட்டில் உள்ளார்.

இந்தநிலையில், மகளின் அழுகுரல் கேட்டு அறைக்கு சென்று பார்த்துள்ளார், அப்போது மூதாட்டி சாந்தி குழந்தையின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

புகாரின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,  சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறத்து விட்டதாக கூறினர். இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பாட்டி சாந்தியிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.