பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை..!!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78). படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வாணி ஜெயரம் கடந்த 1971 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த “குட்டி”படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’பாடம் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 18 மொழிகளில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அண்மையில் தான் வாணி ஜெயராமுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது.

இந்நிலையில், மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க காவலர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.