வங்க தேசத்தில் தாக்கப்பட்ட இந்துக் கோயில்கள்; இந்துக்கள் மத்தியில் பீதி!

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இப்போது வங்கதேசத்தில் ஒரே நேரத்தில் 14 கோவில்களை சேதப்படுத்தி, நாசவேலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைக்கு பாதுகாப்பில்லாமல் தொடர்ச்சியாக பதற்றத்தில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சனிக்கிழமை இரவு 14 இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன

வங்காளதேசத்தின் (Bangladesh) வடமேற்குப் பகுதியில் உள்ள தாகுர்கானின் பலியடாங்கியில் உள்ள கோயில்களில்  நாசவேலை சம்பவம் நடந்துள்ளது. கிராமத்தில் வசிக்கும் இந்து சமூகத்தின் தலைவரான பித்யநாத் பர்மன் கூறுகையில், சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தெரியாத நபர்கள் இருளைப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்ட முறையில் கோயில்களைத் தாக்கத் தொடங்கினர். தடி மற்றும் பிற ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் 14 கோவில்களை நாசப்படுத்தினர். இதன்போது, ​​பல சிலைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு, பல சிலைகள் அருகில் உள்ள குளத்தில் வீசப்பட்டன.

தாக்குதலுக்குப் பிறகு வங்கதேச இந்துக்கள் மத்தியில் பீதி

கோவில்கள்  மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று பர்மன் கூறினார். இருள் சூழ்ந்திருந்ததால் யாராலும் அவர்களைப் பார்க்க முடியவில்லை. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால், அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளனர். மேலும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க | ஒருவழியாக பலூனை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா… அடுத்தது என்ன?

உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

சங்க பரிஷத் தலைவரும், இந்துத் தலைவருமான சமர் சட்டர்ஜி, கோவில்கள் இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வருத்தமும் ஆச்சரியமும் தெரிவித்துள்ளார். இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கலந்த பகுதி என்று சாட்டர்ஜி கூறினார். இங்கு இந்துக்களுடன் நல்லுறவு கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இருவருக்கும் இடையே எந்த சர்ச்சையும் இல்லை. இவ்வாறான நிலையில் இந்த சம்பவத்தை செய்தவர் யார் என வியப்படைகிறது. உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

கோவில்களில் இடிபாடுகள் நடப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தாக்குர்கான் காவல்துறை தலைவர் ஜஹாங்கீர் உசேன், சனிக்கிழமை இரவு இந்த நாசகார சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். முதல் பார்வையில், இந்த விவகாரம் அப்பகுதியின் அமைதியைக் கெடுக்கும் சதியாகத் தெரிகிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்கள் அடையாளம் தெரிந்தவுடன், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க | அப்பாடா டிவிட்டர் தொல்லை முடிஞ்சுபோச்சு! நிம்மதி பெருமூச்சு விடும் எலான் மஸ்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.