வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடும், காப்பீடும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் , 33 சதவீதம் பாதிக்கப் பட்ட வயல்களுக்கு இழப்பீடும், காப்பீடும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் ஈரப்பதம் 22 சதவீதத்தை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.