மதுரை || ஆன்லைன் சூதாட்டதினால் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்.! 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றால் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 144 தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதனால், பொழுதை எவ்வாறு கழிக்கலாம் என்று நினைத்து தங்களது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தனர். இது நாளடைவில் மக்களை அதற்குள்ளேயே மூழ்கடித்தது. இதனால் மக்களில் சிலர் மனா உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில், தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். ஓட்டல் ஊழியரான இவர் கடந்த ஆறு மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார். முதலில் இவர் பணத்தை வென்றாலும், அடுத்தடுத்து பணத்தை இழந்து வந்துள்ளார். 

நாளடைவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான குணசீலன், தன்னிடம் இருந்த பணத்தை முழுவதும் இழந்து, பின்னர் தெரிந்தவர்களிடம் கடன் வங்கி விளையாடியுள்ளார். இருப்பினும் அந்த பணத்தையும் இழந்துள்ளார். 

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குணசீலன் நேற்றிரவு தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.