“காங்கிரஸ் வெறுப்பு அரசியல் செய்கிறது”- பிரதமர் மோடி தாக்கு!

பட்ஜெட் தாக்கலின் போது குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். திரவுபதி முர்மு உரை மூலம் பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி மட்டும் இல்லாமல், வாழ்த்துக்களையும் தான் தெரிவிப்பதாக மோடி கூறினார்.

குடியரசு தலைவரின் உரை தொலைநோக்கு பார்வை கொண்டதாக அமைந்தது. 130 கோடி மக்களும் குடியரசு தலைவரின் உரையை ஏற்றுக்கொண்டு உள்ளனர். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து பழங்குடியின மக்களுக்கு பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் வெறுப்பு அரசியலை கையில் எடுப்பதாகவும், ராகுல் காந்தியின் பேச்சுக்கு மறைமுறைமாக பதிலளித்தார். காங்கிரசின் வெறுப்பு அரசியல் இன்று மக்களவையில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது. ஊடக வெளிச்சத்தில் வர வேண்டும் என்பதற்காக பலர் தேவையற்ற செயல்களை செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி; இந்தியாவில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தினை இந்தியா வெற்றிகரமாக செய்யப்படுத்தி உள்ளது. சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கக்கூடிய ஒரு நல்ல ஆட்சி தற்போது மத்தியில் நிலவி வருகிறது. இந்தியாவின் விநியோக சங்கிலி தற்போது வரை பிற நாடுகளுக்கு வியப்பாக உள்ளது. செல்போன் உற்பத்தியை பொறுத்தவரை இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது. உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் ஒவ்வொரு பாதையையும் மிக உண்ணிப்பாக கவனித்து வருகிறது.

மோடி- அதானி உறவு; கார்கே, நிர்மலா இடையே வெடித்த வாக்குவாதம்!

இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி சிறந்த முன்னேற்றத்தையும், புதிய பாதையையும் உருவாக்கி உள்ளது. தற்போது ஊழல் அற்ற நாடாக இந்தியா உருவாகி உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பணவீக்கம் மோசமாக இருந்தது. மேலும், அந்த ஆட்சி காலத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. 2G ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் தான் நடைபெற்றதாக மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

உலக நாடுகளில் பலவற்றிலும் வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்றவை கடுமையாக பாதித்து வந்தன. ஆனால், இந்தியாவில் அதை எல்லாம் நாம் கடந்து வந்தோம். உலக அளவில் பொருளாளதார வளர்ச்சியில் இந்தியா நேர்மறையான வழியில் செல்கிறது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. இப்போது உள்ள பாஜக அரசு யாருக்கும் பயந்து, அடி பணிந்து செல்லக்கூடிய ஆட்சி கிடையாது என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.