கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.

உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சமடைய ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், லெஸ்போஸ் தீவுக்கு அருகே உள்ள கடற்பாறையில் அகதிகள் படகு மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று நீரில் தத்தளித்த 16 பேரை உயிருடன் மீட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.