காவல்துறை ரோந்து வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது..!

சேலத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தை திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீசார், வாகனத்தை மீட்டனர். 

குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் மாநகர காவல்துறைக்கு சொந்தமான வாகனம்  நேற்றிரவு காணாமல் போனது.

இது தொடர்பாக சேலம் மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அரசு சின்னம் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. 

விசாரணையில் அந்த வாகன எண் போலி என தெரிய வந்தது. அயோத்தியாபட்டணம் பகுதியில் அந்த வாகனம் சுற்றித் திரிவது தெரிய வந்ததை அடுத்து அங்கு சென்ற அஸ்தம்பட்டி காவல்துறையினர் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த காரை ஓட்டிச் சென்ற மதன்குமார் என்பவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் ரோந்து வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் அளித்த தகவலின் படி சூரமங்கலத்தில் இருந்த திருடப்பட்ட வாகனத்தை மீட்ட காவல்துறையினர் அவரிடம் உள்ள போலி பதிவு எண் கொண்ட வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.