Rajinikanth:கதை கேட்ட ரஜினி: உனக்கெல்லாம் சொல்ல முடியாது என்ற பிரபலம்

Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை கேட்டபோது, உனக்கு எல்லாம் சொல்ல முடியாது என அவரிடம் ஒரு பிரபலம் கூறியிருக்கிறார்.

ரஜினிநடிகர், நடிகைகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை. இயக்குநர்களுக்கோ, சூப்பர் ஸ்டாரை இயக்க வேண்டும் என விருப்பம். இப்படி திரைத்துறையில் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஏக்கம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் தான் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் ரஜினியிடமே முடியாது என ஒருவர் கூறியிருக்கிறார்.
கதைரஜினி கேட்டும் முடியாது என்று சொன்னவர் அன்னக்கிளி கே. செல்வராஜ். பிரபல கதாசிரியரான அவர் பெண்களை உயர்வாக வைத்து கதை எழுதுவதற்கு பெயர் போனவர். அவர் தனக்கு கதை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதையடுத்தே செல்வராஜை தான் இருக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்து, எனக்கு ஒரு கதை எழுதுங்களேன் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முடியாதுசெல்வராஜ் ரஜினிக்கு நெருக்கமானவர். அந்த உரிமையில் தான் கதை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் அவரோ, உன் படத்தில் நீ ஒரு அடி அடிச்சா 40 பேர் கீழே விழுவார்கள் ரஜினி. என்னால் அது போன்று கதை எழுத முடியாது. உனக்கு கதை எழுத முடியாது என்று கூறியிருக்கிறார். என் டிராக் வேறு, உன் டிராக் வேறு என்று செல்வராஜ் சொன்ன காரணத்தை ரஜினி புரிந்து கொண்டாராம்.

வியப்புரஜினியே கேட்டும் ஒருவர் கதை சொல்ல மறுத்த விபரம் அறிந்த ரசிகர்கள் வியந்து போய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி என் வீடு தேடி வந்து என்னை வைத்து படம் பண்ணுங்கள் என கேட்டாலும் இயக்க மாட்டேன் என வைரமுத்துவிடம் ஷங்கர் கூறியது பற்றியும் தற்போது பேசப்படுகிறது. ரஜினி மீது ஷங்கர் அந்த அளவுக்கு கோபப்பட்டதற்கும் காரணம் உள்ளது.
ஷங்கர்தன்னுடைய முதல்வன் படத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் கேட்டிருக்கிறார் ஷங்கர். ஆனால் ரஜினியோ இல்ல சார் என்று கூறி ஷங்கரை அனுப்பிவைத்துவிட்டாராம். அதன் பிறகு சிவாஜி படத்தில் நடிக்க கேட்டதற்கும் ரஜினி நோ சொல்லியிருக்கிறார். பின்னர் ஏ.வி. எம். சரவணன் மூலம் தான் ஷங்கர் சமாதானம் ஆகி ரஜினியை வைத்து சிவாஜி படத்தை இயக்கியிருக்கிறார். ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​Rajinikanth: ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்: ஷங்கர் கோபம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.