நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அடுத்த மலைவேப்பங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செந்தில்குமார் (வயது 42). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட செந்தில் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.