டிரிபிள் தலாக் முதல் அயோத்தி தீர்ப்பு வரை… ஆளுநராகினார் அப்துல் நசீர்..!

முன்னாள் நீதிபதி அப்துல் நசீர்

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் வெவ்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக

தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்திலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஆந்திரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் நசீர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ஜனவரி 4, 2023 புதன்கிழமை அன்று ஒய்வு பெற்றுள்ளார். இவர், இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் சர்ச்சை மிகுந்த அயோத்தி வழக்கில் இருந்து முத்தலாக் வழக்கு வரையிலான சில முக்கியமான வழக்குகளை தீர்ப்பளித்த அமர்வுகளில் நீதிபதியாக இருந்துள்ளார்.
பணமதிப்பிழப்புஉச்ச நீதிமன்ற நீதிபதியாக அப்துல் நசீர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார். இவர் இடம்பெற்றிருந்த நீதிபதிகளின் அமர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகளில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அப்துல் நசீர் பதவியில் இருந்த கடைசி நாட்களில் கூட, அவர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2016 முதல் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியது. ”மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் மற்றும் கருத்துரிமையை கட்டுப்படுத்த கூடுதல் விதிகளை அமல்படுத்த தேவையில்லை என்ற உத்தரவுகள்தான் அவை.
சந்தித்த சவால்கள்உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் நசீர் சிறிது காலத்திற்குப் பிறகு, ‘டிரிபிள் தலாக்’ நடைமுறைக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு பானோ என்ற இஸ்லாமிய பெண் அவரது கணவர் ‘தலாக்’ என்ற வார்த்தையை மூன்று முறை கூறி தன்னை விவாகரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், இந்த நடைமுறை மத சுதந்திரத்திற்கான உரிமையால் பாதுகாக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது எதிர்தரப்பில் வாதிட்ட அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்த நடைமுறை முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதி என்றும், மத சுதந்திரத்தால் பாதுகாக்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.
முத்தலாக் வழக்கில் மாறுபட்ட கருத்துஅப்போது, இரு தரப்பு வாதத்துக்கும் உடன்பட்ட நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் ஜே.எஸ். கேஹர் இருவரும் பாராளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் இயற்றப்படும் வரை ஆறு மாதங்களுக்கு நடைமுறையை நிறுத்த பரிந்துரைத்தனர். ஆனால், மற்ற 3 நீதிபதிகள் ‘ட்ரிபிள் தலாக்’ பெண்களுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு என்றும் இந்த நடைமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து மற்ற இரு நீதிபதிகளின் பரிந்துரையை நீர்த்துப்போக செய்தது.
அயோத்தி தீர்ப்புஅந்த தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி நசீர், அயோத்தி உரிமைப் பிரச்சினை தொடர்பான, மதரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றொரு சர்ச்சையில் பெஞ்சில் உறுப்பினராக இருந்தார். நவம்பர் 09, 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. ஆகையால் நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும், இராம் லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆந்திர ஆளுநர்இரு சர்ச்சையான வழக்குகளை விசாரித்த பெஞ்சில் ஒரே முஸ்லீம் நீதிபதியாக இருந்த அப்துல் நசீர், அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு அவர் ஒப்புதல் அளித்தது மற்றும் முத்தலாக் வழக்கில் அவரது கருத்து வேறுபாடு ஆகியவை பரவலான கவனத்தைப் பெற்றன. இத்தனை சவால் நிறைந்த வழக்குகளில் நீதிபதியாக நீதிபதியாக இருந்த இவர் கடந்த புதன்கிழமை அன்று பணி ஒய்வு பெற்றார். அவர் விசாரித்த வழக்குகளில் 13 முக்கிய வரலாற்று தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநராக பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.