மும்பையில் WiFi பழுதுபார்ப்பவர்கள் போல நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து நகை கொள்ளை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் WiFi பழுதுபார்ப்பவர்கள் போல நடித்து தனியாக இருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையடித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மத்திய மும்பையில் உள்ள பரேலில் 59 வயதான பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது, அங்கு வந்த இரண்டுபேர் தங்களை WiFi பழுதுபார்ப்பவர்கள் எனக் கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

திடீரென அந்த பெண்ணின் வாயை துணியால் மூடி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். அலமாரியின் சாவியை தர மறுத்ததால், கத்தியால் பெண்ணின் மார்பில் குத்திவிட்டு இரண்டு பேரும் தப்பிச்சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.